புதிய வரிச் சட்டமூலத்தின் ஊடாக தொழில் புரியும் தரப்பினர் பாதிப்பு-பந்துல குணவர்தன

239 0
நாடாளுமன்றத்தில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள புதிய வரிச் சட்டமூலத்தின் ஊடாக, நாட்டின் தொழில் புரியும் தரப்பினர் கடுமையான பாதிக்கப்படுவார்கள் என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையின் படி, கானாவுக்கு தயாரிக்கப்பட்ட சட்ட மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையில் உள்ள தொழில்புரியும் வர்க்கத்தினார் மிகவும் பாதிக்கப்பப்படுவர்.
மறுபுறத்தே அது சர்வதேசத்தை மகிழ்ச்சிப்படுத்தும்.
இதனையே, தற்போதைய அரசாங்கம் மேற்கொள்வதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment