A/L மற்றும் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதத்தில்

23250 77

இம்முறை கல்விப் பொ.த உயர் தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சைகள் முறையே ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன.

2ஆயிரத்து 230 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள உயர் தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227  மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , 3 ஆயிரத்து 14 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள 5ம் தர புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

Leave a comment