இம்முறை கல்விப் பொ.த உயர் தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சைகள் முறையே ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன.
2ஆயிரத்து 230 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள உயர் தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் , 3 ஆயிரத்து 14 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள 5ம் தர புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.