3 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

236 0

களனி, நுங்கமகொட பிரதேசத்தில் 3 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர், இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடற்படையினர் மற்றும் களனி பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்தது கைப்பற்றப்பட் கேரள கஞ்சா, உள்ளூரில் விநியோகிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா என்பன, மேலதிக விசாரணை நடவடிக்கைக்காக களனி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a comment