33 வருடங்களின் பின்னர் வாவெட்டி ஈஸ்வர பெருமானுக்கு மக்கள் வழிபாடு

627 0

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தோடு தொடர்புடைய வாவெட்டி மலையில் அமைந்திருக்கின்ற வாவெட்டி ஈஸ்வர பெருமானுக்கு  இன்று ஆலய பரிபாலனை சபை உள்ளிட்ட மக்களால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

1984 ஆம் ஆண்டிற்கு பின்னர் யுத்த சூழ்நிலை காரணமாக ஆலயத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தால் இவ்வருடம் வனவள பாதுகாப்பு பிரிவு , பொலிசார் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவு அதிகாரிகளோடு  கலந்துரையாடி தீர்க்கமான முடிவின் பின்னர் அனைவரையும் அழைத்து சென்று இன்றைய தினம் வாவெட்டி ஈஸ்வர பெருமானுக்குரிய வழிபாடுகளை ஆலய பரிபாலனை சபையினரும் மக்களும் இணைந்து மேற்கொண்டனர்.

Leave a comment