கொழும்பு மாவட்டத்தில் இன்று விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம்

28650 0

கொழும்பு மாவட்டத்தில் இன்றைய தினம் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணி, இராணுவம் மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

இதன்படி ஹோமாகம, கஹாதுடுவ மற்றும் சீதாவாக்கை பிரதேச செயலக பகுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், இதுவரை டெங்கு நோயால் 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேல் மாகாணத்திலலேயே அதிகளவு டெங்கு நோயாள்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment