சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

6372 0

வவுனியா பிரதேசத்தில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வவுனியா – வெப்பங்குளம் பிரதேசத்தில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை சிறுமி உயிரிழந்துள்ளதுடன், துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தின் நிறைவேற்று அதிகாரி காவற்துறையிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி பாடசாலை, நிறைவடைந்துள்ள நிலையில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு வந்துள்ளதனை தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தன்னை திட்டியதாக, குறித்த இல்லத்தின் மற்றும் ஓர் சிறுமியிடம், தற்கொலை செய்து கொண்ட சிறுமி கூறியுள்ளமை தெரியவந்துள்ளது.

Leave a comment