எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

258 0

ஹொரணை – போருவதண்ட பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நுழைந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தினை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் அளவில் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இந்த கொள்ளை இடம்பெற்றுள்ள நிலையில், உந்துருளியிலேயே கொள்ளையர்கள் வந்துள்ளனர்.

கொள்ளை தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்வதற்காக ஹொரணை காவற்துறை விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a comment