புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதியொருவர் தற்கொலை

231 0

பிலிமதலாவ – நானுஓயா புகையிரத பாதுகாப்பு கடவைக்கு அருகில் புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அண்மையில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான யுவதியென என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பல கடிதங்களையும் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் காதல் விவகாரமாக இருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.

அந்த யுவதி, காதலனுக்கு எழுதி வைத்துள்ள கடிதங்களையும், காதலனை அழைத்து காவற்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்த யுவதி கொழும்பு பகுதியில் கல்வி பயிற்சி நெறி ஒன்றில் ஈடுபட்டுவந்துள்ளவர் என தெரியவந்துள்ளது.

Leave a comment