சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

452 0

mahinda-amaraweeraபுத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்தையும், கட்சியையும் விமர்சித்தமையினால் இவர் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அழைப்பு கடிதங்களுக்கு தீ வைத்த குருநாகல் மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை கட்சி உறுப்பு பதவிகளிலுருந்து நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.