சைட்டத்திற்கு எதிரான மற்றும் ஆதரவான போராட்டங்களுக்கு தடை

247 0
மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கறுவாத் தோட்ட காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையொன்றுக்கு அமைய கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
சுகாதார அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்து, அதன் உடமைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதேவேளை, சுகாதார அமைச்சில் அத்துமீறி உள்நுழைந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதரா சேவையாளர்கள் சங்கங்களின் ஒன்றியம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருத்தது.
குறித்த இரண்டு ஆர்ப்பாட்டங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Leave a comment