சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து எடுத்துவரப்பட்ட அதிக பெறுமதிவாய்ந்த தங்க நகைகளுடன் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் விமாநிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பெங்கோக் நகரிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
சப்பாத்துக்குள் வைத்து மறைத்து எடுத்து வந்தபோதே சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன் பெறுமதி குறித்து இதுவரை தீர்மானிக்கப்படாதுள்ளதாகவும் சுங்கப் பிரிவு அதிகாரி மேலும் கூறியுள்ளார்.