17 வயதான பாடசாலை மாணவியொருவர் தற்கொலை

220 0

17 வயதான பாடசாலை மாணவியொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெலிமடை – அம்பகஸ்தொவ – கரகஹாஉல்பத பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தையின் எச்சரிக்கையால் கோபமடைந்து இவ்வாறு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி தேநீரில் விஷத்தை கலந்து குடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விஷம் உடல் முழுவதும் பரவியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Leave a comment