மலையகத்தில் கடும் மழை

231 0

மலையகத்தில் பெய்துவரும் மழை காரணமாக, மஸ்கெலியா மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கங்கள் வான்பாயும் நிலையில் இருப்பதாக, தேசியநீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது குறித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 14 அடி 2 அங்குலம் மற்றும் 9 அடி 2 அங்குலம் என்ற அளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து லக்ஸபான, புதிய லக்ஸபான, பொல்பிட்டிய, கெனியன் மற்றும் விமசுரேந்திர மின்னுற்பத்தி மையங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment