அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை

240 0

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆறு இலங்கையர்கள் இன்றையதினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்துக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் நேற்று ஆறு இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

15 அவுஸ்திரேலிய குடிரவுத்துறை அதிகாரிகளும் அவர்களுடன் உடன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக, இலங்கை குடிவரவுத்திணைகளம் தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் அனைவரும் காலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment