மாத்தறை அதிர்ச்சி – தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் சடலங்களாக மீட்பு

211 0

மாத்தறை – கம்புருபிட்டிய – பெரளிஹதுர பகுதியில் தந்தை மற்றும் மூன்று சிறார்களின் சடலங்கள் மீட்பப்பட்டுள்ளன.

44 வயது தந்தையும், அவரது 10 மற்றும் 16 வயது மகள்களும், 14 வயது மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வசித்துவந்த வீடு தீப்பற்றிய நிலையில், பிரதேச மக்கள், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதே குறித்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சிறார்களின் தாய் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளிNயுறியுள்ளதாகவும், குடும்பத் தகராறொன்றின் காணரமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment