இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்தை மதிக்காமல் செயற்படுகிறது – தமிழக முதலமைச்சர்

325 0

இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்தின் ராஜதந்திர செயற்பாடுகளை மதிக்காமல் செயற்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்கள் இலங்கை கடற்படையினரால கைது செய்யப்படுகின்றமையும் அதிகரித்துள்ளது.

தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் உயர்ந்த பட்ச ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment