வீதியோரங்களில் குவியும் குப்பைக்கூளங்களே டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உருவாவதற்கு முக்கியமான காரணமாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
அண்மையில் மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்ததை அடுத்து, குப்பைக்கூளங்களை சேகரிப்பதற்கான இடப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் வீதியோரங்களில் அதிக அளவான குப்பைக் குவியல்கள் உருவாகியுள்ள நிலையில், அவற்றில் இருந்து டெங்கு நுளம்புகள் பரவ ஆரம்பித்துள்ளன.
இதன் விளைவாகவே அண்மைக்காலமாக டெங்கு நோய்ப் பரவல் தீவிரமாக அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.