100 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸ் தேடலில்!

213 0

சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து கலவரம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டார்கள் மற்றும் அங்கிருந்த சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேர் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மாணவர்களில் சிலர், தங்களது சொந்த இடங்களைவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்காக, பொலிஸ் குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a comment