தேசிய லொத்தர் சபை -உயர்நீதிமன்றம் செல்கிறது ஒன்றிணைந்த எதிரணி!

222 0

தேசிய லொத்தர் சபையை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைத்தமை உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வைக் கோரி, உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவிக்கின்றது.

“இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வீணான பொருளாதாரத் தீர்மானங்களால், நாட்டில் சிக்கல்நிலை தோன்றியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தவே, இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என, கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Leave a comment