காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி

216 0

வரகாபொல நகரில் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்த நபரொருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது காவற்துறை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறைக்கு கிடைத்த அவசர தகவலுக்கு அமைய காவற்துறை அந்த இடத்திற்கு சென்றுள்ளது.

இதன்போது அங்கிருந்த சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில், காவற்துறை ,அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர், வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது

Leave a comment