அரசாங்கத்தின் தவறான பொருளாதார தீர்மானங்கள் காரணமாக நாட்டில் அடிக்கடி நெருக்கடி நிலைகள் தோன்றுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
நிதியமைச்சின் கீழ் இருந்த இலங்கை லொத்தர் சபை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
எனவே இவை உள்ளிட்ட பல காரணிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கம் பிரச்சனைகளுக்கு அழைப்பு விடுத்து பிரச்சனைகைளை தோற்று விப்பதாகவும் பந்துள குணவர்தன தெரிவித்தார்.