தொடரூந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை!

222 0

கட்டண அதிகரிப்பொன்றை கோரி போக்குவரத்து அமைச்சருக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறுதியாக தொடரூந்து கட்டண சீர்த்திருத்தம் கடந்த 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் , அவ்வருடத்தின் பிறகு பல சந்தர்ப்பங்களில் எரிபொருளின் விலை அதிகரித்த போதும் தொடரூந்து கட்டண சீர்த்திருத்தமொன்று மேற்கொள்ளப்படவில்லை என தொடரூந்து  உதவி வர்த்தக அதிகாரி என்.ஜே. இதிபொலகே தெரிவித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு நூற்றுக்கு 20 வீத கட்டண அதிகரிப்பை கோரி யோசனையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் , இதுவரை அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

அதன்படி , ஜூலை மாதம் 1ம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ள பேரூந்து கட்டணத்துடன் , தொடரூந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டும் என தொடரூந்து  உதவி வர்த்தக அதிகாரி தெரிவித்திருந்தார்.

Leave a comment