காட்டு யானை தாக்கி 2 பேர் பலி

229 0

காட்டு யானை தாக்கி சிறுமி உடப்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் காவன்னிஸ்புர – மங்கலவேவ வீதியில் சென்று கொண்டிருந்த சிறுமி, காட்டி யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

காவன்னிஸ்புர பிரதேசத்தினை சேர்ந்த 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று இரவு பொத்துவில் – முருசான சந்தி வீதியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது காட்டு யானை தாக்கியுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த குறித்த நபர் பொத்துவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

Leave a comment