கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர் கைது

230 0

ஹொரனை – மொரகஹஹேன – குபுக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 4 லட்சம் பெறுமதியான தங்க மாலை ஒன்றை கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குபுக பிரதேசத்தில் உள்ள மரக்கறி வர்த்தக நிலையத்தினை, மூடுவதற்கு குறித்த வர்த்தகர் தயாராகி கொண்டிருந்த நிலையில் இவ்வாறு கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வர்த்தகர் மற்றும் ஒருவர் இணைந்து கொள்ளையடித்து செல்ல முற்பட்டவரை பிடித்து காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் இன்று ஹொரனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment