இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது

233 0
சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் இவர்கள் இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
தடை செய்யப்பட்ட வலைகளுடன் இரண்டு டோலர் இயந்திரங்களுடன் எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு நெடுந்தீவுக்கு அண்மிந்த கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகள் மற்றும் மீன்கள் என்பன யாழ்ப்பாண கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபட்ட மேலும் 6 இந்திய மீனவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலை மன்னாருக்கு அண்மித்த கடற்பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment