இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலினால் பதற்றநிலை

235 0
காவத்தை எந்தான தோட்டத்தில் கப்பெல பிரிவில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணபரிமாற்றத்தில் ஏற்றபட்ட முறுகல் நிலை அவர்களுக்கிடையில் மோதலை தோற்றுவித்தது.
குறித்த மோதலில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் வீடு உட்பட 3 வீடுகளுக்கு தீமூட்டப்பட்டமையினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவற்துறையினர் சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a comment