உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக உலக வங்கி நிதியுதவி

198 0
இலங்கையின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக பத்துக் கோடி அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியின் மூலம் உயர் கல்வி பெறும் மாணவர்கள் பெரிதும் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலக வங்கியினால் 115 நாடுகளில மேற்கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை 88 ஆவது நாடாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment