தமிழக கடற்றொழிலாளர்கள் 8 பேர் கைது

229 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு கடற்பகுதியின் தென்கிழக்கு திசையில் 17 கடல் மைல்கள் தொலைவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர்கள் பயன்படுத்திய படகொன்றும், கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைப்பற்றப்பட்ட படகும், கடற்றொழில் உபகரணகங்களும் அவரிடம் கையளிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment