கொட்டதெனியாவில் தாய் மற்றும் இரு பிள்கைள் மீது கொடூரத் தாக்குதல் – ஒருவர் பலி

556 0

கொட்டதெனியாவ பிரதேச்தில் நேற்று இரவு நபரொருவரால் பெண்ணொருவர் மற்றும் அவரின் பிள்ளைகள் இருவர் மீது மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த நபர் அந்த பெண்ணுடன் தவறான தொடர்பு கொண்டிருந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளும், தாயும், மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது பெண் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.

தற்போது அந்த பெண்ணும் மற்றைய பிள்ளையும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் கத்தியால் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான தாய் மற்றும் பிள்ளைகளும் ஹெலகம – கிதுல்வல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் மற்றும் சந்தேக நபருக்கும் இடையே காணப்பட்ட தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவிக்கின்றது.

இந்நிலையில் கொட்டதெனியாவ பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான சந்தேக நபர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவ காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது

Leave a comment