எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – மஹிந்த

332 0

1043953432makindaஎதிர்வரும் 11ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவுள்ள வெட் வரி சீர்திருத்த சட்டமூலத்திற்கு, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்கஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக மட்டுப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.