விபத்தில் ஒருவர் பலி

323 0

Fotor0424230533யாழ்ப்பாணம் மல்லாகம் கோட்டைக்காடு முருகன் கோவிலடி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதுண்டு அவர் உயிரிழந்துள்ளார்.
48 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரூந்த கடவை இல்லாமையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக தெரிவித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது