வாகன தொடரணி மீது தாக்குதல் – 6 வெளிநாட்டவர்கள் காயம்

325 0

attack_CIமேற்கு ஆப்கானிஸ்தானை நோக்கி சென்ற சுற்றுலா பயணிகளின் வாகன தொடரணியை இலக்கு வைத்து போராளிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுதவிர மேலும் பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இராணுவ பாதுகாப்புடன் சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள், ஹேரத் (ர்நசயவ) நகரத்தை அண்மித்த வேளையில் போராளிகள் மறைந்திருந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தொடரணியில் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஜெமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற பிரதேசத்திற்கு மேலதிக துருப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.