வடமாகாண சபைக்கான புதிய அமைச்சர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை – சி.வி.விக்னேஸ்வரன்

1703 0

வடமாகாண சபைக்கான புதிய அமைச்சர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் அமர்வு இன்று இடம்பெற்றது..

அதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களை சபைக்கு வெளியில் சந்தித்த போது முதலமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் பதவி விலகப்பணிக்கப்பட்டனர்.

இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்ப, மாகாண சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்களிடம் இருந்து சுயவிபரக் கோவைகள் கோரப்பட்டுள்ளன.

மிகவிரைவில் குறித்த அமைச்சுப் பதவிகளுக்கானவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment