வடமாகாண முதலமைச்சர் நிதியம் தொடர்பில் ஒரு வாரத்தில் பதில் -சீ.வி.விக்னேஸ்வரன்

376 0

வடமாகாண முதலமைச்சர் நிதியம் தொடர்பில் ஒரு வாரத்தில் பதில் வழங்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை அமர்வின் போது இதுதொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

குறித்த நிதியத்தை உருவாக்குவதற்கான கடிதங்கள் ஆளுனர், சட்டமா அதிபர் உள்ளிட்டத் தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், இன்னும் அதற்கான அனுமதி கிடைக்கப் பெறவில்லை.

இந்த நிலையில் இதுதொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று சிவாஜிலிங்கம் ஆலோசனை வழங்கினார்.

எனினும் இதற்கு அவசியம் இல்லை என்று தெரிவித்த முதலமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி, இது தொடர்பில் ஒரு வாரத்தில் பதில் வழங்குவதாக குறிப்பிட்டார்.

Leave a comment