நேற்று நள்ளிரவு ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும்

247 0
தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தினால் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
பணிக்கு இணைத்து கொள்ளும் பொறிமுறையை மறுசீரமைப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமது போராட்டத்திற்கு ஏனைய சில சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் உப தலைவர் பி ஏ டி பெரேரா  தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் இந்த போராட்டத்தினால் தொடந்து போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட  தெரிவித்தார்.
எனினும் தமது ஒத்துழைப்பின்றி தொடரூந்து சேவையில் ஈடுப்படுவது பாதுகாப்பானது அல்லவென தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் உபதலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment