பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது-நவீன் திஸாநாயக்க

227 0
பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது என்று அமைச்சர்நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை தொழிற்துறையில் க்லைபோசேட் கிரிமிநாசினியை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் நிலையில்,இதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
க்லைபோசேட் கிரிமிநாசினியின் தடை நீக்கம் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment