பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 4 பேர் கைது

279 0

மேல் மாகாணத்தினுள் உந்துளிகளில் வந்து துப்பாக்கிகளை காட்டி மிரட்டி வர்த்தக நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான விஷேட குற்றத்தடுப்பு பிரிவால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து டி-56 ரக துப்பாக்கியொன்றும், கைத்துப்பாக்கிகள் இரண்டும், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 30, 31 , 33, 34 வயதான கொஸ்கம மற்றும் கெட்டதெனிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Leave a comment