உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதிக்காது நடத்தப்பட வேண்டும்-தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

244 0
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் தாமதிக்காது நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துமாறு, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
கொழும்பில் ஒன்றிணைந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பெப்ரல், கபோ மற்றும் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் போன்ற கண்காணிப்பு அமைப்புகள் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.
புதிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டதன் பின்னர், மேலும் இந்த தேர்தலை காலம் தாழ்த்த காரணங்கள் இருக்க மாட்டாது.
ஏற்கனவே அரசாங்கம் இந்த தேர்தலை நீண்டகாலம் நடத்தாது காலம்கடத்தியுள்ளது.
மேலும் இந்த தேர்தலை தாமதிப்பதானது, மாகாண சபைத் தேர்தல்களையும் பாதிக்கும் என்று அந்தஅமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Leave a comment