வைத்திய சபையின் தலைவர் பதவி 30ம் திகதியுடன் வெற்றிடம்!

287 0

இலங்கை வைத்திய சபையின் தலைவர் பதவிக்கு இம் மாதம் 30ம் திகதியுடன் வெற்றிடம் ஏற்படுவதாக, வைத்திய சபையின் பதிவாளர் டெரன்ஸ் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தற்போது சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை வைத்திய சபையின் தற்போதைய தலைவராக உள்ள பேராசிரியர் ஹலோ பொன்சேகாவின் கால எல்லை எதிர்வரும் 30ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் 31ம் திகதியுடன் அவரது காலஎல்லை நிறைவடையவிருந்த நிலையில், தொடர்ந்தும் ஆறு மாதம் ( இம் மாதம் 30ம் திகதி வரை) அவர் அப் பதவியில் நீடிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

இதற்கமைய தொடர்ந்தும் அவரது பதவிக் காலத்தை நீடிப்பதா அல்லது புதிய தலைவரை நியமிப்பதா என்பது குறித்து சுகாதார அமைச்சு தீர்மானிக்கும் என, டெரன்ஸ் டி சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment