இலங்கை மீன் உற்பத்தியை மேம்படுத்த சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்

250 0

இலங்கை கடற்பரப்பில் மீன் உற்பத்தியை முன்னெடுப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ள சீன முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சீன முதலீட்டாளர்கள், மீன்பிடி மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலிப் வேதஆராச்சிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மீன் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளுக்கு முதலீடுகளை வழங்க தாம் தயாராகவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், சீனாவிலுள்ள மேலும் சில முதலீட்டாளர்களையும் இதன் பொருட்டு அனுப்பி வைக்க முடியும் எனவும் இந்தக் கலந்துரையாடலின் போது சீன முதலீட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment