பாரிய இனவாத வன்முறைகளுக்கு கடும்போக்குவாதிகள் தயாராகி வருவதாக எச்சரிக்கை  

236 0

பாரிய இனவாத வன்முறைகளுக்கு கடும்போக்குவாதிகள் தயாராகி வருவதாக தேசிய சமாதான பேரவை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமது அறிக்கை ஒன்றில் தேசிய சமாதான பேரவை இதனைத் தெரிவித்துள்ளது.

சிறுபான்மை சமுகங்களுக்கு எதிரான தாக்குதல்கள் அண்மைக்காலமாக மேலோங்கி இருக்கின்றன.

இவ்வாறான தாக்குதல்கள் ஊடாக, அடிப்படைவாதிகள் பாரிய இன வன்முறைக்கான சோதனைகளை நடத்தி வருவதைப் போல தென்படுவதாக சமாதான பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அரசாங்கம் இப்போதே இந்த விடயத்தில் தலையிட்டு வன்முறைகளுக்கான அடிப்படை காரணிகளை தணிக்க வேண்டும்.

குறிப்பாக சட்ட ஒழுங்குகளை சீராக அமுலாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய சமதான பேரவை தெரிவித்துள்ளது.

Leave a comment