குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளுக்கு, படையினரை ஒருபோதும் ஈடுபடுத்தப்போவதில்லை

289 0

குப்பை முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு இராணுவத்தினரின் உதவி பெறப்படுகின்ற போதிலும், குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளுக்கு, படையினரை ஒருபோதும் ஈடுபடுத்தப்போவதில்லை என்று, இராணுவத் தலைமையகம் நேற்று அறிவித்தது. 

நாளாந்தம் குப்பைகள் அதிகமாகக் குவிக்கப்படும் இடங்கள் தொடர்பில், உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கும் செயற்பாட்டில் மாத்திரமே, படையினர் ஈடுபடுத்தப்படுவர் என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்காக, கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களின் கண்காணிப்புப் பணிகளுக்கான இராணுவக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த பேச்சாளர், சட்டவிரோதமான முறையில் குப்பைகளைக் கொட்டும் நபர்களைக் கைது செய்வதற்காக, பொலிஸாரினால் விசேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதற்காக, சிவில் ஆடைகளில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடபட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை, இராணுவத்தினர் வழங்குவர் என்றும், இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

 

 

Leave a comment