ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக உள்ளக ரீதியில் கிளர்ச்சி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சி உள்வாட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்கள் வெளியிடுவதனை நிறுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

