வட மாகாணத்தில் 5 கோ பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

211 0

கடந்த இரண்டு தினங்களில் கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

402 கிலோ கிராம் நிறைகொண்ட கேரள கஞ்சா கடற்படையினருடன் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மீனவ படகில் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்ட 260 கிலோ கிராம் நிறையுடைய ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சங்குப்பிட்டி பகுதியில் வைத்து ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இவர் நீண்ட காலமாக இந்தியாவில் இருந்து கேரள கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வந்து, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விநியோகித்துள்ளமை விசாரணைகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மானிப்பாயில் உள்ள அவரது வீட்டில் இருந்தும் 12 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன் இடையே, நேற்று முன்தினம் மன்னார் கடற்பரப்பில் 142 கிலோ கிராம் நிறையான சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்கா கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a comment