தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் சவால்

254 0

தமிழக சட்ட சபையில் புதிய வாக்கெடுப்பின் மூலம் தமக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என நிரூபிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி ஈ பழனிச்சாமிக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக எதிர்கட்சி தலைவர் மு.கா ஸ்டாலின் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவோவுக்கு, ஸ்டாலின் இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர் பழனிச்சாமி முறையற்ற விதத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதன்பொருட்டு அவர் உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்கியுள்ளார் எனவும் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் நிதிச் சலவைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய உளவுத்துறைக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் மு.கா ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment