கேரள கஞ்சாவுடன் சிலாவத்துறையில் ஒருவர் கைது

228 0

சிலாவத்துறையில் கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் மறிச்சுக்கட்டி, கரடக்குளி கடற்கரையோரமாக மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கடத்த முற்படுகையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 142 கிலோ கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைக்காக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment