விக்னேஸ்வரன் விடயத்தில் மத்திய அரசு தலையிடாது: மைத்திரி

251 0

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பான விடயத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை அடுத்து, அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசு ஊழலுக்கு எதிரான செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்ற நிலையில், ஊழல் தொடர்பான முதல்வரின் இவ்விடயத்தில் மத்திய அரசு தலையிடுவது பொருத்தமற்றது என்றும் குறிப்பிட்டார்.

Leave a comment