ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்

271 0

புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது. அர்த்தமில்லாத விசாரணைகளில் என்னை தொடர்புபடுத்தி விட்டு என்னை தொல்லை செய்ய வேண்டாம் என முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார்.

பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக  ஆஜராகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Leave a comment