அனர்த்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவி

221 0

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஜுன் மாத வேதனத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காலிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது வேதனத்தை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வழங்கவுள்ளனர்.

கூட்டமைப்பின் பொதுசெயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜே வி பியும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வினவியப் போதும், அது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.