தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று இன்று (30) பகல் 1.40 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
சடலம் சுமார் 55 வயது மதிக்கதக்கதென தெரிவித்த பொலிஸார் இது கொலையா அல்லது தற்கொலையா அல்லது அண்மையில் பெய்த மழையினால் அடித்துச் செல்லப்பட்டு என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

